உடல், மனரீதியாக சித்திரவதை: பிரக்யா புகார்
மும்பை: தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதாக மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் மீண்டும் புகார் கூறியுள்ளனர்.
பிரக்யா சிங், ஷாம்லால் சாஹு, அஜய் ரஹீர்கர், சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாய், சிவநாராயண் சிங், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் நேற்று மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்ட கோர்ட்டில் நீதிபதி ஷிண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அப்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மீது பரபரப்பு புகார்களை அடுக்கினார் பிரக்யா சிங் தாக்கூர்.
அவர் நீதிபதியிடம் கூறுகையில், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி போலீஸார் என்னைத் திட்டுகின்றனர். ஆபாசப் படங்களைக் காட்டி கூச வைக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
நள்ளிரவு 2 மணிக்கு என்னை எழுப்பி, நி்ர்வாண கோலத்தில் உன்னை அடிப்போம் என்று மிரட்டுகின்றனர் என்றார்.
புரோஹித் கூறுகையில், எனது மனைவி மற்றும் சகோதரி குறித்து ஆபாசமான வார்த்தைகளை என்னிடம் போலீஸார் பிரயோகித்தனர். எனது வீட்டில் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளை வைத்து எனது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போடுவோம் என மிரட்டுகின்றனர் என்றார்.
மற்ற குற்றவாளிகளும் இதேபோன்ற புகார்களை நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது வாக்குமூலங்களை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியான் பதிலளிக்கையில், புகார்கள் மிகப் பெரிதாக இருப்பதால், இதுகுறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
பின்னர் மீண்டும் பிரக்யாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் தரப்பில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications