போலீஸ் ஜீப்களில் தப்பிச் சென்ற தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

Terrorist Jeep
மும்பை: மும்பை கொலாபா பகுதியி்ல் பொது மக்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் போலீசாரின் இரண்டு ஜீப்களிலேயே தப்பிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு மும்பையில் 9 இடங்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கொலாபா பகுதியி்ல் திடீரென கையெறி குண்டுகளை வீசினர்.

இதில் பலர் அந்த இடத்திலேயே இறந்தனர். இதையடுத்து துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது 3 தீவிரவாதிகள் அங்கிருந்து நழுவி போலீசாரின் இரு ஜீப்களில் ஏறினர்.

அதில் ஒன்று மகிந்திரா ஜீப், இன்னொன்று குவாலிஸ் ஜீப்பாகும். மகிந்திரா ஜீப்பின் எண் MH01 BA 5179. ஒரு குவாலிஸ் ஜீப்பின் எண் MH01 -2A- 102 ஆகும்.

இரண்டும் சிவப்பு விளக்குகள் பொறுத்தப்பட்டவை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இன்னும் அந்த இரு ஜீப்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிரவாதிகளும் பிடிபடவில்லை.

இந்த வாகனங்களைப் பார்ப்போர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+