2 குழுக்களாக பிரிந்து தீவிரவாதிகளை தாக்கினோம்: கமாண்டோக்கள்
மும்பை: தாஜ் ஹோட்டலுக்கு ஒரு குழுவும், ஓபராய் ஹோட்டலுக்கு ஒரு குழுவும் என இரண்டாகப் பிரிந்து சென்று தீவிரவாதிகளுடன் சண்டையிட்டோம் என கடற்படை கமாண்டோக்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை தீவிரவாதிகளை வேட்டையாடியதில் கடற்படை கமாண்டோக்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டலி்ல் தாக்குதல் நடத்திய தீவரவாதிகளுடன் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஆங்க்ரே போர்க்கப்பலைச் சேர்ந்த அதி விரைவு கமாண்டோக்கள் தீரத்துடன் சண்டையிட்டு பல தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதல் குறித்து கமாண்டோக்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர் கூறுகையில், தாஜ் ஹோட்டலுக்கும், ஓபராய் ஹோட்டலுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்றோம்.
தாஜ் ஹோட்டலுக்குப் போனபோது 15 இறந்த உடல்களை நாங்கள் பார்த்தோம். ஹோட்டல் ஊழியர்களிடமிருந்து ஹோட்டல் குறித்த வரைபடத்தைப் பார்த்து அதை வைத்து உள்ளே சென்று வேட்டையில் இறங்கினோம்.
தாஜ் ஹோட்டலி்ன் சிசிடிவி அறைக்குள் செல்ல முயன்றபோது அங்கு தீவைக்கப்பட்டிருந்ததால் அது எரிந்து கொண்டிருந்தது. எனவே எங்களால் உள்ளே போக முடியவில்லை.
ஒரு அறையில் 1200 டாலர் அமெரிக்கப் பணம், வெளிநாட்டு அடையாள அட்டைகள், கிரெடடிட் கார்டுகளை கண்டு மீட்டோம்.
ஓபராய் ஹோட்டலிலிருந்து 100 பேரை நாங்கள் மீட்டு வெளியேற்றினோம்.
தாஜ் ஹோட்டலின் 8வது மாடியிலிருந்து தீவிரவாதிகள் எங்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications