டைம்ஸ் ஆப் இந்தியா பெண் நிருபர் கதி என்ன?
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கன்சல்டிங் எடிட்டராக பணியாற்றி வரும் சபீனா சேகல் சைக்கியா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது கதி என்ன என்று தெரியவில்லை.
பிரபல சமையல் கலை விமர்சகரான சபீனா, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கன்சல்டிங் எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர் அங்கு தங்கியிருந்தார்.
இவரது கணவர் சாந்தனு சைக்கியாவும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ஆவார். அலுவலகப் பணியாக 2 நாட்களுக்கு முன்புதான் மும்பை வந்தார் சைக்கியா. தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் தனது மனைவியைத் தொடர்பு கொள்ள முயன்றார் சாந்தனு. ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் மும்பை கிளம்பி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் முதலே சைக்கியாவின் செல்போன் செயலிழந்து உள்ளது.
இதுகுறித்து சாந்தனு கூறுகையில், எனது மனைவி தங்கியிருந்த பகுதியில்தான் முதலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் தங்கியிருந்த அறைப் பகுதியில்தான் முதலில் தீப்பிடித்துள்ளது.
இதனால் நான் எனது மனைவியை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவரது செல்போன் செயிலிழந்துள்ளது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
ஒன்று அவர் அறையில் ஏற்பட்ட தீயில் சிக்கியிருக்க வேண்டும் அல்லது பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை சபீனா குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை என்றார்.
சபீனா, ஒரு சமையல் கலை விமர்சகர் ஆவார். சமையல் கலை குறித்தும், ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகள் குறித்தும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications