டைம்ஸ் ஆப் இந்தியா பெண் நிருபர் கதி என்ன?
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கன்சல்டிங் எடிட்டராக பணியாற்றி வரும் சபீனா சேகல் சைக்கியா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது கதி என்ன என்று தெரியவில்லை.
பிரபல சமையல் கலை விமர்சகரான சபீனா, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கன்சல்டிங் எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர் அங்கு தங்கியிருந்தார்.
இவரது கணவர் சாந்தனு சைக்கியாவும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ஆவார். அலுவலகப் பணியாக 2 நாட்களுக்கு முன்புதான் மும்பை வந்தார் சைக்கியா. தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் தனது மனைவியைத் தொடர்பு கொள்ள முயன்றார் சாந்தனு. ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் மும்பை கிளம்பி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் முதலே சைக்கியாவின் செல்போன் செயலிழந்து உள்ளது.
இதுகுறித்து சாந்தனு கூறுகையில், எனது மனைவி தங்கியிருந்த பகுதியில்தான் முதலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் தங்கியிருந்த அறைப் பகுதியில்தான் முதலில் தீப்பிடித்துள்ளது.
இதனால் நான் எனது மனைவியை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவரது செல்போன் செயிலிழந்துள்ளது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
ஒன்று அவர் அறையில் ஏற்பட்ட தீயில் சிக்கியிருக்க வேண்டும் அல்லது பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை சபீனா குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை என்றார்.
சபீனா, ஒரு சமையல் கலை விமர்சகர் ஆவார். சமையல் கலை குறித்தும், ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகள் குறித்தும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications