ஹோட்டல்களில் 'கன்ட்ரோம் ரூம்' அமைத்த தீவிரவாதிகள்!
தாஜ் மற்றும் டிரைடன்ட் ஹோட்டல்களில் இந்த கட்டுப்பாட்டு அறைகளை அவர்கள் அமைத்துள்ளனர். அதி நவீனமான முறையில் இந்த கட்டுப்பாட்டு அறைகள் அமைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
பல மாதங்களாக திட்டமிட்டு, மிக மிக துல்லியமாக செயல்பட்டுள்ளனர் தீவிரவாதிகள்.
இதுகுறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், இந்த வரலாறு காணாத தீவிரவாதத் தாக்குதல் திடீரென நடத்தப்பட்டதல்ல. பல மாதங்களாக இதற்காக பக்காவாக திட்டமிட்டுள்ளனர்.
வெறும் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் மட்டும் தீவிரவாதிகள் வரவில்லை. மாறாக, எம்.பி.-6 போன்ற அதி நவீன ஆயுதங்களையும் உடன் கொண்டு வந்துள்ளனர்.
எந்தெந்த இடங்களைத் தாக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அவர்களுக்கு உள்ளூரிலிருந்து சிலர் தகவல் கொடுத்திருக்க வேண்டும். மிக மிக திறமையாக திட்டம் போட்டுள்ளனர்.
ஒரு கப்பல் மூலம் அவர்கள் பயணித்து வந்துள்ளனர். பின்னர் சிறிய ரக ரப்பர் படகுகள் மூலம் கேட் ஆப் இந்தியா பகுதிக்கு வந்திறங்கியுள்ளனர்.
கண் மூடித்தனமாக அவர்கள் மக்களை சுடவில்லை. எப்படி சுட வேண்டும், எத்தனை பேரை சுட வேண்டும், யாரைச் சுட வேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு சுட்டுள்ளனர்.
முக்கிய போலீஸ் அதிகாரிகளை அவர்கள் குறி வைத்து சுட்டுத் தள்ளியுள்ளனர். இத்தனைக்கும் இந்த போலீஸ் அதிகாரிகள் புல்லட் புரூப் உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களுடன் வந்தும் கூட அவர்களால் உயிர் தப்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வந்த வேகத்தில் சில விநாடிகளில் அவர்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்றார் சிபல்.













Click it and Unblock the Notifications