இலங்கையில் அமைதி-நாகர்கோவிலில் பிரார்த்தனை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோயில்: இலங்கையில் அமைதி வேண்டி நாகர்கோவிலில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட வேண்டும் என்பதற்காக நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் அறநிலையத்துறை பணியாளர்கள் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் கையில் அகல் விளக்கு ஏந்தி இலங்கையில் அமைதி நிலவ வேண்டி ஒரு நிமிடம் மெளன பிரார்த்தனை செய்தனர்.

அப்போது ஓதுவார்கள் சிவபுராணம், தேவாரம் ஆகியவற்றை பய பக்தியுடன் பாடினார்கள். அதைத் தொடர்ந்து பூசாரி, சங்கல்ப பூஜை நடத்தினார்.

இது குறித்து இணை ஆணையர் பாஸ்கரன் கூறுகையில், அறநிலையத்துறை பணியாளர்கள் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடத்தி உள்ளோம்.

திருக்கோவிலின் எல்லா பணியாளர்களும் ஒரு நாள் சம்பள தொகையான ரூ.16 ஆயிரத்தை நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர் என்றார்.

கூட்டு பிரார்த்தனையில், உதவி ஆணையர் முத்து தியாகராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நடராஜன், மீனாட்சி மற்றும் கோவில் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+