மும்பை தாக்குதலில் எங்களுக்குத் தொடர்பில்லை - பாக்.
இஸ்லாமாபாத்: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதுகுறித்து அவசரப்பட்டு இந்தியா புகார் கூறக் கூடாது என அந்த நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி முக்தார் அகமது கூறியுள்ளார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என வலுவாக நம்பப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்தே தீவிரவாதிகள் கப்பல் மூலம் மும்பைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை சம்பவத்திற்கும், தங்களது நாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அகமது கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் பங்கு எதுவும் இல்லை. இதற்கு முன்பும் கூட பலமுறை பாகிஸ்தானின் பெயரை சம்பந்தப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவை தவறு என்பது பின்னர் நிரூபனமானது என்றார்.
இதற்கிடையே, நான்கு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறுகையில், இதுபோன்று அவசரப்பட்டு கருத்து கூறுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். தீவிரவாதத்தை இரு நாடுகளும் இணைந்துதான் எதிர்கொள்ள வேண்டும்.
அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரக் கூடாது. சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சம்பவம் இதற்கு ஒரு நல்ல உதாரணம் என்றார் அவர்.
சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானே காரணம் என முதலில் நம்பப்பட்டது. ஆனால் இந்து தீவிரவாத அமைப்புகளே அதற்குக் காரணம் என சமீபத்தில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் சிக்கியுள்ள தீவிரவாதிகளிடமிருந்து கிடைத்த தகவல்கள், லஷ்கர் இ தொய்பா அமைப்பு இதில் சம்பந்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக மகாராஷ்டிர போலீஸார் கூறுகின்றனர்.
மேலும் டிரைடென்ட் ஹோட்டலில் பாதுகாப்புப் படையினரிடம் உயிருடன் சிக்கிய தீவிரவாதி அபு இஸ்மாயில் என்பவர் பாகிஸ்தானின் பரீத்கோட் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications