தீவிரவாத தாக்குதலில் பலியான தொழிலதிபர்கள்

Subscribe to Oneindia Tamil

Ashok Kapur
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஏராளமான தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள், பல்துறைப் பிரமுகர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் ஓபராய் ஹோட்டல்கள் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நாரிமன் ஹவுஸும் மீட்கப்பட்டு விட்டது.

தற்போது அங்கு உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அவற்றை அடையாளம் காண குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் குழுமியுள்ளனர்.

தாஜ் ஹோட்டலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஆனால் ஓபராய் ஹோட்டலில்தான் அதிக அளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஹோட்டலில்தான் பல முக்கியப் பிரபலங்கள் ஏராளமான பேர் உயிரிழந்துள்ளனர்.

எஸ் வங்கியின் செயல் தலைவரும், கோ புரமோட்டருமான அசோக் கபூர், தொழிலதிபர் சுனில் பரேக், டெவலப்பர் பங்கஜ் ஷா, வக்கீல் அனந்த் பட்வரே ஆகியோர் இவர்களில் சிலர்.

கபூரின் உடல் 19வது மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. தனது மனைவி மதுவுடன் டின்னருக்கு அவர் ஹோட்டலுக்கு வந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மனைவி மது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

எஸ் வங்கியில், அவருக்கும், வங்கி நிர்வாக இயக்குநர் ரானா கபூருக்கும் 34 சதவீத பங்குகள் உள்ளன.

சுனில் பரேக், கப்பல் பிசினஸில் ஈடுபட்டிருந்தார். அவரது மனைவி ரேஷ்மாவும் ஓபராய் ஹோட்டலின் டிப்பின் எனப்படும் காபி ஷாப்பில் இருந்தபோது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இஸ்பாட் இன்டஸ்ட்ரியின் செயல் இயக்குநர் வினோத் கார்க்கின் மனைவி உமா கார்க், 19வது மாடியில் உயிரிழந்து கிடந்தார்.

கணவர் மற்றும் வெளிநாட்டு கிளையன்ட் சிலருடன் அவர் டின்னருக்கு வந்தபோது இந்த துரதிர்ஷ்டம் ஏற்பட்டது.

வினோத் கார்க் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

அதேபோல, ஷா மற்றும் பட் ஆகியோர் இன்னொரு டெவலப்பரான அபூர்வ பரேக்குடன் அதே ஹோட்டலின் காந்தஹார் ரெஸ்டாரன்ட்டில் இருந்தபோது, தீவிரவாதிகளிடம் சிக்கினர். இதில் பரேக் காயத்துடன் தப்பினார்.

பட் உள்ளிட்ட மற்றவர்கள் உயிரிழந்தனர். பிரபலமான சட்ட நிபுணர் பட் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலைச் சேர்ந்த ரப்பி மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உடல்கள் நாரிமன் ஹவுஸில் மீட்கப்பட்டன.

ரப்பி, அவரது மனைவி உள்பட ஐந்து பேரின் உடல்கள் நாரிமன் ஹவுஸிருந்து மீட்கப்பட்டன.

ரப்பி கவ்ரியேல் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஹோல்ட்ஸ்பர்க் ஆகியோர் மும்பை சபாத் -லுபாவிட்ச்சின் இயக்குநர்கள் ஆவர்.

இவர்களின் மரணத்திற்கு உலகெங்கும் உள்ள யூத அமைப்புகள் கடும் அதிர்ச்சியும், சோகமும் வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் ரப்பி தம்பதியினரின் 2வயது மகன் மோஷே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். கூடவே அவனது பாட்டியும் உயிர் தப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+