சிவராஜ் பாட்டீல் விலகினார்-உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்: விலாஸ்ராவும் விலகுகிறார்

அதே போல மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார் என்று தெரிகிறது.
நாட்டில் கடந்த நாலரை ஆண்டுகளாக நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு உளவுப் பிரிவின் தோல்வியே காரணம் என்று மீண்டும் மீண்டும் உறுதியான நிலையில் அந்தப் பிரிவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்துறை அமைச்சகமும் அதன் அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் தனது பதவியைக் காப்பதிலேயே தீவிரமாக இருந்தார்.
தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தில் முன்னிலையில் நிற்க வேண்டிய இந்தத் துறை பெரும் தோல்வியை அடைந்த நிலையில் பாட்டீல் மீதான கோபம் நாடு முழுவதும் அதிகரித்து வந்தது.
ஆனாலும் சோனியா காந்தி குடும்பத்துடனான தனது நல்லுறவை பயன்படுத்திக் கொண்டு பதவியை தக்க வைத்து வந்தார் பாட்டீல்.
இந் நிலையில் வந்தது மும்பை தாக்குதல். இதுவரை இந்தியா கண்டிராத மிகப் புதிய வகையிலான தாக்குதல் இது. கடல் வழியே வந்து தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் நாட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் கடல் வழியே பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வந்து போவது குறி்த்தும், ஆயுதங்கள் வருவது குறித்தும் மகாராஷ்டிர, குஜராத் மீனவர்கள் அந்த மாநிலங்களின் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.
ஆனால், இரு மாநில அரசுகளும் செயல்படத் தவறியுள்ளன.
இந்த மாநிலங்களின் செயல்படும் மத்திய உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ் பீரோவும் இந்த தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து தகவல்களை திரட்டத் தவறியுள்ளது. இவர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர்களை உளவு பார்க்கவே நேரம் போதாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல உள்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கடலோரக் காவல் படையும் (கடற் படை அல்ல) இந்த விஷயத்தில் பெரும் தோல்வி அடைந்துள்ளது.
இதையடுத்து உள்துறைக்கு தலைமை வகிக்கும் பாட்டீலுக்கு எதிரான கோபம் மீண்டும் வெடித்தது. தாக்குதல் நடந்து 4 நாட்களாகிவிட்ட நிலையில் அவரை மும்பையிலும் பார்க்க முடியவில்லை, டெல்லியிலும் வெளியில் தலை காட்டவில்லை.
மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு வந்தது.
ஆனால், நேற்று பிரதமர் நடத்திய மிக முக்கியமான உயர் மட்டக் கூட்டத்துக்கு பாட்டீல் அழைக்கப்படவில்லை. மேலும் நேற்று கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் ஆகியோருக்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கடும் கருத்துத் தெரிவித்தனர். அவரை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார் சிவராஜ் பாட்டீல்.
அதில் மும்பை தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் இப்போது ஜகார்தாவில் சுற்றுப் பயணத்தில் உள்ள ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பப்பட்டது.
அவர் பாட்டீலின் ராஜினாமாவை உடனே ஏற்றுக் கொண்டுவிட்டார்.
அதே போல ப.சிதம்பரத்தை உள்துறை அமைச்சராக நியமித்து பிரதமர் வெளியிட்ட உத்தரவுக்கும் ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டார்.
இதையடுத்து சிதம்பரம் உடனடியாக உள்துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
முன்னதாக ப.சிதம்பரம் தவிர பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் பெயர்களும் உள்துறை அமைச்சர் பதவிக்கு அடிபட்டன. ஆனால், பாகிஸ்தானுடனான மோதல் தீவிரமாகியுள்ள நிலையில் முகர்ஜியை மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது.
சிதம்பரத்திடமே அந்தப் பொறுப்பை வழங்கலாம் என சோனியா கூறிவிட்டதையடுத்து அவர் உள்துறை அமைச்சராகியுள்ளார்.
ஏற்கனவே ராஜிவ் காந்தியின் ஆட்சியில் உள்துறை இணையமைச்சராக இருந்த சிதம்பரம் உள்நாட்டு பாதுகாப்பை கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ப.சிதம்பம் கவனித்து வந்த நிதித்துறையை பிரதமரே கையாள்வார் என்று கூறப்படுகிறது. வேறு யாரும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படப் போவதில்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications