இந்திய எல்லையில் ராணுவத்தைக் குவிப்போம்: பாக். மிரட்டல்
டெல்லி: போர் பதட்டத்தை உருவாக்குகிறது இந்தியா. இந்த நிலை நீடித்தால், ஆப்கன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை, இந்திய எல்லைக்கு அனுப்ப நேரிடும் என பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகைககள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்துதான் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது, ஆட்கள் வந்தது என இந்தியா குற்றம் சாட்டி வருவதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் இவ்வாறு மிரட்டல் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அந்த அதிகாரி பாகிஸ்தான் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுடன் புதிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் எங்களால் கவனம் செலுத்த முடியாது என பாகிஸ்தான் அரசு, நேட்டோ மற்றும் அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டது.
இந்தியப் பகுதியிலிருந்து புதிய நிகழ்வுகள் ஏற்பட்டால், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாங்கள் கவனம் செலுத்த முடியாது.
எங்களது மேற்குப் பிராந்திய படைகளை இந்தியப் பகுதிக்கு மாற்ற நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.
இப்படிக் கூறினால்தான் அமெரிக்கா அவசரமாக தலையிட்டு இந்தியாவை சமாதானப்படுத்தும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீவிரமாக இறங்காது என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications