சட்டமன்றத் தேர்தல்-ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil

200 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு மும்பை தீவிரவாதத் தாக்குதலையடுத்து மிக மிக பலத்த பாதுகாப்புக்கிடையே தேர்தல் நடந்தது.
மாநிலம் முழுவதும் 42,212 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 3.6 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இந்தத் தேர்தலில் 2,193 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாஜக தேர்தலை சந்திந்தது. வாக்காளர்களைக் கவர சாலைகளில் பாஜகவினர் இன்று காலை கங்கை நீரைத் தெளித்து வரவேற்றனர்.
காங்கிரஸ் 200 இடங்களிலும் பாஜக 193 இடங்களிலும் போட்டியிடும் இந்தத் தேர்தலில் 199 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications