உளவுத்துறை தோல்வி; மன்னிப்பு கேட்கிறேன்-ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

Chidambaram
மும்பை: உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ப.சிதம்பரம் இன்று மும்பை வந்து தீவிரவாதத் தாக்குதலில் காயமடைந்தோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். ப.சிதம்பரம் புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து ரா, ஐபி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் இன்று மும்பை வந்தார் ப.சிதம்பரம். பின்னர் ஜேஜே மருத்துவமனைக்குச் சென்ற அவர் அங்கு தீவிரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாஜ் ஹோட்டல், டிரைடன்ட் மற்றும் நாரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களுக்கும் செல்கிறார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தத் தாக்குதலுக்கு உளவுத் துறையின் தோல்வியும் ஒரு காரணம். இந்தத் தாக்குதலை தடுக்காததற்காக நான் மும்பை மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+