லோக்சபா: சீட் பெற விரும்பும் அதிமுகவினர் விண்ணப்பிக்கலாம் - ஜெ.
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விண்ணப்பிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
அனைத்துத் தேர்தல்களிலும், அனைவருக்கும் முன்பாக வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று வேட்பாளர்களைத் தேர்வு செய்து முன்கூட்டியே அறிவிப்பது அதிமுக ஸ்டைல்.
அந்த வகையில், லோக்சபா தேர்தல் எப்போது என்று இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், பாஜக பாணியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் வேலையில் இறங்கி விட்டது அதிமுக. அதற்கு முதல் கட்டமாக தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விண்ணப்பிக்கலாம் என கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அடுத்த லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், டிசம்பர் 27ம் தேதிக்குள் தங்களது விருப்ப விண்ணப்பங்களை அனுப்பலாம்.
டிசம்பர் 10ம் தேதி முதல் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ரூ. 10,000 கொடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் முன்பாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு பிரசாரத்தையும் தொடங்குவது ஜெயலலிதாவின் வழக்கம். கடந்த 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், ஜெயலலிதா தனது பிரசாரத்தை ஜரூராக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications