'டிஸ்மிஸ் ஆட்டத்துக்குத் தயாராகும் இந்திய நிறுவனங்கள்!
டெல்லி: இந்திய நிறுவனங்களில் இதுவரை கமுக்கமாக நடந்து வந்த ஊழியர் பணி நீக்கங்கள் இனி பகிரங்கமாக நடக்கத் துவங்குகின்றன.
அதற்கான சட்ட ஆலோசனைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன பெரிய நிறுவனங்கள்.
பணிநீக்கம் செய்யும்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க தங்களது சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கென்றே புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் பலரை இவை பணியில் அமர்த்தி வருகின்றன.
சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களில் இந்தியாவில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் சட்ட உதவி கேட்டுள்ளதாக டெல்லியைச் சேர்ந்த சட்ட ஆலோசனை மையம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் அனைத்து துறையின் வருமானமும் பாதிக்கப்பட்டாலும், சட்ட ஆலோசனை நிறுவனங்களின் வருவாய் மட்டும் அதிகரித்துள்ளது. யாரை பணிநீக்கம் செய்தால் சட்ட ரீதியான பிரச்னை எழாது, பிரச்னை எழுந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என யோசனை கேட்டு வருகின்றன.
எந்தெந்த நிறுவனங்கள் இந்த வேலையில் இறங்கியுள்ளன என்ற விவரத்தை மட்டும் அந்த மையம் தெரிவிக்க மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications