ரூ. 23,000 கோடியில் 6 லட்சம் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி!

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையான இண்டர்நெட் வசதி அளிக்க ரூ.23 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறது மத்திய அரசு.

இணையத்தின் அவசியம் உணர்ந்து நகரப் பகுதிகள் பெரும்பாலும் தனியார் மற்றும் பிஎஸ்என்எல்லின் சேவைகளைப் பெற்று வருகின்றன.

ஆனால் கிராமங்களில் உள்ளவர்களுக்கு இன்னும் இணைய வசதிகள் கிடைக்கவில்லை.

இதற்காக நாட்டில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தித் தர முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

இதற்காக 23,000 கோடி ரூபாயை செலவிட உத்தேசித்துள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின உதவியுடன் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இது உடனடியாக நிறைவேற்றி முடிக்கும் திட்டமில்லை என்பதால், ஐந்தாண்டு கால திட்டமாக வடிவமைத்துள்ளது மத்திய அரசு.

இந்த்த் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+