For Daily Alerts
Just In
டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயது சிறுவன் பலி
கரூர்: கரூர் அருகே உள்ள அரவாக்குறிச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
கரூர் மாவட்டம், அரவாக்குறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது குழந்தை அஸ்கர்.
அஸ்கருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால், அருகில் உள்ள டாக்டரிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், எதிர்பார்த்தபடி அஸ்கர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாதாதல், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு குழந்தை அஸ்கருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது என்று கண்டறியப்பட்டது.
இதனையடு்த்து அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அஸ்கர் பரிதாபமாக இறந்தான்.
Story first published: Sunday, December 7, 2008, 10:58 [IST]