For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

புதுச்சேரி: வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் வலுவிழந்தாலும் புதுவைக் கடலோரப் பகுதிகளில் இன்று கடும் மழை பெய்தது. பகல் ஒரு மணிக்குத் தொடங்கிய மழை பெரும் காற்றுடன் நான்கு மணி நேரம் பெய்தது. தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் பள்ளிகளுக்குச் சென்ற குழந்தைகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். அலுவலகத்திற்குச் சென்றவர்கள் பணி முடித்துத் திரும்ப முடியவில்லை.

தாழ்பான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன் பல வீடுகளி்ல் நீர் புகுந்தது.

சாக்கடைகள் தூர்வாராமல் விடப்பட்டதால் கழிவு நீருடந் கலந்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து நாறடித்துவிட்டது.

மழை மேலும் நீடித்தால் மக்கள் மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரும்.அரசு போர்க் கால அடிப்படையில் புதுவையின் பள்ளமான பகுதிகளான கிருஷ்ணா நகர், சூரியகாந்தி நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாக்கமுடையான் பட்டு, இந்திராகாந்தி சிலை, சாரம் ஆகிய பகுதிகளை தூர்வார வேண்டும் என்று அப் பகுதி மக்கள் எதி்ர்பார்க்கி்ன்றனர்.

கடலூர் மாவட்டத்திலும்..

அதே போல தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X