தூத்துக்குடியில், 4 நேபாளிகள் கைது - தீவிரவாதிகளா?
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில், சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த நான்கு நேபாள நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் சில நேபாளிகள் சந்தேகத்திற்கிடமாக தங்கியிருப்பதாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தூத்துக்குடி கணேசன் நகரில் பதுங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
விசாரணையில் அவர்கள் நோபாளத்தை சேர்ந்தவர்கள் என்றும், தூத்துக்குடிக்கு வேலைக்காக வந்துள்ளோம் என்றும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் காஷ்மிரில் வேலை செய்திருப்பதும் தெரிய வந்தது.
அவர்கள் தீவிரவாதிகளா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications