இது அதிமுக ஸ்டைல்..எம்பி தேர்தல்-ஜெ போட்டியிட மனுக்கள்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி மாஜி அமைச்சர்கள் மனுக்களை குவித்துள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை அதிமுக தலைமைக் கழகத்தில் மனுக்களை அளிக்கலாம் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து அதிமுக மாஜி அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பலரும் ஜெயலலிதா போட்டியிடக் கோரி மனுக்களை அளித்தனர். ஆண்டுதோறும் அதிமுகவில் நடக்கும் நிகழ்ச்சி இது. ஜெயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாடடார் என்றாலும் கூட இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு மனு செய்து பணம் கட்டுவது அதிமுகவில் வழக்கம். அந்த வகையில் இந்த முறையும் மனுக்கள் தரப்பட்டுள்ளன.
வட சென்னை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி அக் கட்சியி் அவைத் தலைவர் மதுசூதனன் மனு அளித்தார். தேனி தொகுதியில் போட்டியிட மாஜி முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பொன்னையனும் மனு அளித்தனர்.
ஈரோடு தொகுதியில் போட்டியிடக் கோரி மாஜி அமைச்சர்கள் முத்துசாமி, செங்கோட்டையன் ஆகியோரும், சிவகங்கையில் போட்டியிடக் கோரி கோகுல இந்திராவும், கோவையில் போட்டியிடக் கோரி மாஜி அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனும், தர்மபுரியில் போட்டியிட மாஜி அமைச்சர் தம்பிதுரையும், ராமநாதபுரத்தில் போட்டியிட சத்தியமூர்த்தியும் மனு அளித்தனர்.
வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி எம்.எல்.ஏ. சேகர்பாபு மனு கொடுத்தார்.
மத்திய சென்னையில் ஜெயலலிதா போட்டியிட பாலகங்காவும், தென் சென்னையில் போட்டியிட வி.பி.கலைராஜனும், கன்னியாகுமரியில் ஜெயலலிதா போட்டியிட மாஜி அமைச்சர் தளவாய்சுந்தரமும் தென் சென்னையில் ஜெயலலிதா போட்டியிட டி.யு.சி.எஸ். சீனிவாசனும் மனு கொடுத்தனர்.
அதே போல தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி மனோஜ்பாண்டியன் மனு அளித்தார்.
சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு முன்னாள் எம்.பி. வக்கீல் ராஜரத்தினம் மனு கொடுத்தார்.












Click it and Unblock the Notifications