தங்கபாலுவுக்கு கொலை மிரட்டல் கடிதம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை அடையாரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த கடிதத்தி்ல்,
''எங்களை பற்றி அவதூறாக பேசினால் உனது ஆயுளை முடித்து விடுவோம். சோனியாகாந்தியே எங்களை பற்றி பேசாதபோது எதற்காக நீ தொடர்ந்து பேசி வருகிறாய்'' என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கும் இதே போன்ற மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
இது குறித்து தங்கபாலுவின் உதவியாளர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர், நிருபர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து இதுபோன்று மிரட்டல்கள் வந்துக் கொண்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளோம். ஏற்கனவே, டிஜிபியிடமும் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளோம். இந்த மிரட்டல் கடிதம் எழும்பூரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. எண் 80, மார்ஷல்ஸ் சாலை என்ற முகவரி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications