கோட்டை விட்ட கடலோரக் காவல்படை-சிதம்பரம்
டெல்லி: மும்பையில் கடல் வழியே தீவிரவாதிகள் நுழையலாம் என்ற தகவலை உளவுப் பிரிவினர் கடலோரக் காவல் படைக்கு தெரிவித்திருந்தனர் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது:
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற தகவலை உளவுப் பிரிவினர் கடலோரக் காவல் படையிடம் தெரிவித்திருந்தனர். ஆனால், தவற விட்டுவி்ட்டார்கள்.
இதைப் போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும்.
புதிய கடலோரக் காவல் கமாண்ட் அமைப்பு உருவாக்கப்படும்.
உளவுப் பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும். தீவிரவாதிகளை ஒடுக்க 20 சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
நமது நாட்டின் தீவிரவாதத் தடுப்புச் சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் என்.எஸ்.ஜி. படையினர் விரைந்து வருவதில் சில சிரமங்கள் ஏற்பட்டு விட்டது. காரணம், அவர்களுக்கென தனி விமானமோ , விமான நிலையமோ இல்லாததே காரணம்.
இருப்பினும் என்.எஸ்.ஜி. படையினர் வரும் வரை காத்திருக்காமல் மகாராஷ்டிர போலீஸார் தீரத்துடன், செயல்பட்டதை நாம் மறந்து விட முடியாது. அவர்களது பணி அசாதாரணமானது.
உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தில் இடைவெளி ஏற்பட்டு விட்டது உண்மைதான். அதை சரி செய்து, இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மும்பை தாக்குதல் குறித்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் நம் அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. தெற்காசிய பிராந்தியம் முழுவதுமே தீவிரவாதப் பிடியில் சிக்கியுள்ளது என்றார்.
இதையடுத்து இந்த அறிக்கை மீது விவாதம் தொடங்கியது. எதிர்க் கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோர் அதன் மீது பேசினர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications