இடைத் தேர்தல்-ஓகேனக்கல் பிரச்சனையை எழுப்பும் எதியூரப்பா
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் இந்தத் திட்டத்தை கர்நாடம் எதிர்த்து வருகிறது. ஆனால், ஜப்பானிய நிதியுதவியோடு இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பணிகளில் தமிழகம் ஈடுபட்டுள்ளது.
கடந்த பல மாதமாகவே இத் திட்டம் குறித்து அமைதி காத்து வந்தார் எதியூரப்பா.
ஆனால், வரும் 27ம் தேதி கர்நாடக சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வழக்கம்போல ஓட்டு வாங்கும் தந்திரமாக ஓகேனக்கல் பிரச்சனையை மீண்டும் இப்போது கிளப்பியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல், ஓகேனக்கல் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங், இரு மாநிலங்களின் முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
விரைவில் கர்நாடக குழு பிரதமரை சந்திக்கவுள்ளது. அப்போது ஓகேனக்கல் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர (திட்டத்தை ஒழித்துக் கட்ட என்று படிக்கவும்) பிரதமரை வற்புறுத்துவோம் என்றார்.