தொழில்துறை: 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான வீழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் தொழில்துறை கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக அபாயகட்டத்தைத் தொட்டுள்ளது.

இதுவரை மிகக் குறைந்த வளர்ச்சியிலிருந்த தொழில்துறை உற்பத்தி, இப்போது எதிர்மறையாக உள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுரேஷ் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் தொழில்துறை வளர்ச்சி எதிர்மறையாகச் சென்றிருப்பது இதுவே முதல்முறை என்பது கவலை தரும் செய்தி.

இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த அக்டோபரில் தொழில் உற்பத்தி 0.43 சதவிகிதமாகவும், நவம்பரில் அதுவே எதிர்மறையாகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்தம் இந்தியாவை எந்த அளவு மோசமாக பாதித்துள்ளது ன்பதற்கு இது ஒரு உதாரணம்.

பிரதமர் கடந்த மாதம் அறிவித்த 80 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான சலுகைகள் எந்த மாதிரி ஊக்குவிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்த எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+