திருமங்கலம் இடைத் தேர்தல்: நாளை வேட்பு மனுதாக்கல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil

திருமங்கலம் தொகுதியில், ஜனவரி 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
இரண்டு இடங்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை புதூர் நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் திருமங்கலம் தாசில்தார் அலுவலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
இருப்பினும் மனு பரிசீலனை, வாபஸ் பெறுவது, இறுதி வேட்பாளர் பட்டியலை தயாரிப்பது ஆகிய பணிகள் புதூர் நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சீத்தாராமன் அறிவித்துள்ளார்.
நாளை முதல் டிசம்பர் 22ம் தேதி வரை தினசரி முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications