இந்தியா பொறுப்பான நாடு - பாக்.கை தாக்காது: கிலானி
இஸ்லாமாபாத்: இந்தியா பொறுப்பான நாடு. எனவே பாகிஸ்தான் மீது வான் வழித் தாக்குதலை அது மேற்கொள்ளாது என நம்பகிறேன் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.
இதுகுறித்து நியூஸ் இன்டர்நேஷனல் என்ற நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உலக நாடுகளின் முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டம் தணிந்துள்ளது.
இருப்பினும், மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தால் ஏற்ட்டுள்ள இந்த காயம் ஆற சற்று காலம் தேவைப்படும். அதுவரை பதட்டம் நீடிக்கத்தான் செய்யும்.
மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தான் இந்தியாவிடம் கோரியுள்ளது. ஆனால் இதுவரை இந்தியா தரவில்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த யாரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள். அதேசமயம், பாகிஸ்தான் மண்ணை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்தியா பொறுப்பான நாடு. எனவே பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதலை இந்தியா நடத்துமா என்ற கேள்வியே எழவில்லை. எழவும் செய்யாது.
பாகிஸ்தானில்தான், மும்பைத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று இந்தியா சொல்கிறது. அப்படியானால் அதற்கான ஆதாரங்களை அவர்கள் காட்டட்டுமே என்றார் கிலானி.












Click it and Unblock the Notifications