Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிமுத்தாறு நிரம்புகிறது-பாசனத்திற்கு நீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: பாசனத்திற்காக மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை நிரம்பி வருகின்றது. அணை 118 அடி கொள்ளளவு கொண்டது. இதில் தற்போது 109.55 அடி நீர் மட்டம் உள்ளது. இதனால் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது.

பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் நாகராஜன், சேரன்மகாதேவி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரை ஆகியோர் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.

இதனையடு்த்து 1வது, 2வது ரீச் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் அம்பை, நாங்குநேரி, நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்து 834 ஏக்கர் நிலத்தில் பாய்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தொடர்ந்து 120 நாட்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

பாபநாசம் அணை மீண்டும் திறப்பு:

இதற்கிடையே, பாபநாசம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 143 அடியை எட்டியதால் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும் காட்டாறுகளில் அதிகளவில் தண்ணீர் வந்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் மழை ஓய்ந்ததால் அணை மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் கடந்த இரு நாட்களாக நெல்லை, தூத்துக்குடியில் மழை பெய்து வருகிறது.

இதனால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2161 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே அணை நிரம்பி விட்டதால் பாதுகாப்பு கருதி இன்று காலை உபரி தண்ணீர் ஷட்டர் வழியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+