எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் கைது!
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடிக்க முயன்ற 20 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் முதல் தேதி அன்று 4 படகுகளில் , மீன் பிடிப்பதற்காக இலங்கையில் உள்ள புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 20 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
கடலில் காற்று திசை மாறியதால், தாங்கள் வழி தவறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாக கடலோர காவல் படையினரிடம் சிக்கிய இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 4 படகுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இந்திய கடலோர கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications