Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் கேட்டர்பில்லர் ரூ. 800 கோடி முதலீடு

Subscribe to Oneindia Tamil

An MoU signed between Tamil Nadu and Caterpillar India Ltd. in the presence of CM Karunanidhi
சென்னை: கட்டுமான மற்றும் சுரங்க எந்திரங்கள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமான கேடர்பில்லர் நிறுவனம் தமிழகத்தில் மற்றுமொரு தொழிற்சாலையை அமைப்பதோடு ஏற்கனவே உள்ள தனது தொழிற்சாலைகளை ரூ. 800 கோடி முதலீட்டில் விரிவாக்கவுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. சுமார் 1 லட்சம் பேர் இதில் பணிபுரிகி்ன்றனர்.

இந்தியாவிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ள கேடர்பில்லர் நிறுவனத்தின் கட்டுமான இயந்திரங்கள், டீசல் மின் உற்பத்தி எந்திரங்கள் மற்றும் எஞ்சின் தயாரிப்புப் பிரிவுகள் தமிழகத்தில் திருவள்ளூரிலும், ஓசூரிலும் ஏற்கனவே அமைந்துள்ளன.

இதன்மூலம் 2,400 பேர் நேரடியாகவும், 7,500 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்த நிறுவனம் தற்போது ரூ. 800 கோடி முதலீட்டில் கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழில்களுக்குப் பயன்படும் கனரக எந்திர தயாரிப்புத் திட்டங்களை விரிவாக்கவுள்ளது.

திருவள்ளூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளை விரிவாக்குவதுடன், சென்னைக்கு அருகில் மற்றுமொரு புதிய இடத்திலும் ஒரு தொழில் பிரிவைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1,900 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இந்த புதிய விரிவாக்கத் திட்டத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.அரசின் சார்பாக தொழில்துறை முதன்மைச் செயலாளர் எம்.எஃப். பாரூகி, கேடர்பில்லர் இந்தியா நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் தலைவர் கெவின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+