கஸாப் பாகிஸ்தானி தான்-பொய்யை உடைத்த ஷெரீப்

பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் டிவிக்கு நவாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில்,
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அஜ்மல் அமீர் கஸாப்பின் பரீத்கோட் கிராமமே பாகிஸ்தான் படைகளால் சூழப்பட்டுள்ளது. அவரது பெற்றோரை யாரும் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறார்கள். இதை நானே என் கட்சியினர் மூலம் கண்டறிந்தேன் (ஷெரீப்பும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான்).
கஸாப் பாகி்ஸ்தானைச் சேர்ந்தவர் இல்லை என்றால் அவரது வீட்டை ஏன் போலீசார் சுற்றி வளைத்து பெற்றோரை சிறை வைக்க வேண்டும். அந்த கிராமமே ஏன் படைகளால் சூழப்பட்டிருக்க வேண்டும்.
மக்களையும் பத்திரிக்கையாளர்களையும் கஸாப்பின் பெற்றோரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உண்மை வெளியில் வரும்.
இந்த விஷயத்தில் பாகிஸ்தான் தன்னை சுய சோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
சர்தாரியின் செயலற்ற அரசால் பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடாக உலக அரங்கில் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போதுள்ள சூழலில் இருந்து வெளியேற சில உடனடி நடவடிக்கைகளும், உருப்படியான நடவடிக்கைகளும், வெளிப்படையான நடவடிக்கைகளும் தேவை.
மூடி மறைக்கும் செயல்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் விளையாது என்றார் ஷெரீப்.












Click it and Unblock the Notifications