ஊழல் அரசு ஊழியர்களின் சொத்துக்களை பறிக்க புது சட்டம்
புதுடெல்லி: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட்டிருப்போர், லஞ்சம் வாங்கி சேர்த்த சட்டவிரோதமான சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் வகையிலான புதிய சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது சேவையில் ஈடுபடுவோர், மற்றும் அரசு அதிகாரிகள், தங்கள் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தால், அவர்கள் மீது தற்போது, 1988-ம் ஆண்டின் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சட்டத்தை கடுமையாக்கி, ஊழல் தடுப்பு திருத்த மசோதா-2008 என்ற புதிய மசோதாவை, மத்திய அரசு தயாரித்து உள்ளது.
இந்த மசோதாவை லோக்சபாவில், பிரதமர் அலுவலகத்துறை இணை அமைச்சர் பிருத்வி ராஜ் சவான் தாக்கல் செய்தார்.
அதன்படி, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரின் சொத்துக்களை, வழக்கின் ஆரம்ப கட்டத்திலேயே, பறிமுதல் செய்ய, இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்த மசோதா அதிகாரம் கொடுக்கிறது. தீர்ப்பு வந்த பின்தான், சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது இல்லை.
சட்டக் கமிஷன் கொடுத்த பரி்ந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சவான் தெரிவித்தார்.
ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்த மசோதா சட்டமாக்கப்படும்.












Click it and Unblock the Notifications