கிருஸ்துமஸ் ஸ்பெஷல்: கைதிகளுக்கு பிரியாணி
Subscribe to Oneindia Tamil
மதுரை: கிருஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறை கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
கிருஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி உலகம் முழுக்க உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படுகிறது.
இந்திய கிறிஸ்துதவ பணி அமைப்பு சார்பில் சென்னை, மதுரை, சேலம் சிறைகளில் சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதே போன்று கோவை, கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், போன்ற சிறைச்சாலைகளில் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு விடுமுறை தினங்களில் கைதிகளை பார்க்க அனுமதி கிடையாது. ஆனால் இந்த முறை வரும் 25 ம் தேதி அன்று கைதிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications