மனு தாக்கல் செய்தார் லதா-பிரச்சாரத்தில் அழகிரி

இதற்கிடையே, முன்னதாக திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்த மு.க.அழகிரி, இன்று தேர்தல் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.
லதா அதியமான் திருமங்கலத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுவை தாசில்தாரிடம் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ஸ்டாலின், மு.க.அழகிரி, காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோரும் வந்திருந்தனர்.
தேர்தல் பணி-மீண்டும் அழகிரி:
லதா அதியமான் மனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி,
எனக்கு கண் அறுவை சிகிச்சை நடைபெறுவதாக இருந்தது. அதன் காரணமாகவே திருமங்கலத்தில் தேர்தல் பணிக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தேன். ஆனால் தற்போது என் தம்பி ஸ்டாலின்ன் வேண்டுகோளை ஏற்று நான் தேர்தல் பணிக்குழு தலைவராக தொடர முடிவு செய்துள்ளேன் என்றார்.
திருமங்கலத்தில் தனது ஆதரவாளரான எஸ்ஸார் கோபியை வேட்பாளராக அறிவிக்காததால் அழகிரி அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து அவரை சந்தித்து ஸ்டாலின் சமாதானப்படுத்தினார்.
ஆனால், நேற்று மீண்டும் தேர்தல் பணிக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் அழகிரி. இந் நிலையில் மீண்டும் தேர்தல் பணியில் நேரடியாகக் களமிறங்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அங்கு திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சி பரவியுள்ளது.
சரத் வேட்பாளரும் மனு தாக்கல்:
அதே போல அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பத்மநாபனும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற 26ம் தேதி கடைசி நாளாகும்.












Click it and Unblock the Notifications