சென்செக்ஸில் இன்று இறங்குமுகம்!
மும்பை: நாட்டின் பங்குச் சந்தை இன்றும் இறங்கு முகமாகவே இருந்தது. துக்கத்திலேயே, சென்செக்ஸ் 170 புள்ளிகளை இழந்தது. நிப்டி 53 புள்ளிகளை இழந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேன்ஸ், ரான்பாக்ஸி லேபரட்டரீஸ், கிராஸிம் மற்றும் ஏசிசி போன்ற நிறுவனங்கள் சொற்ப லாபத்தில் கைமாறின.
இன்றைய வர்த்தகத்தில் மிகவும் இழப்பைச் சந்தித்துள்ள பங்குகள் ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ். 7.32 சதவிகித நஷ்டத்தில் இந்தப் பங்குகள் கைமாறின.
டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 6.14 சதிவிகித நஷ்டத்தில் விலை போயின. எல் அண்டு டி, ஸ்டெர்லைட் மற்றும் சத்யம் நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 241 புள்ளிகளை இழந்துவிட்டது. நிப்டியில் 70 புள்ளிகள் சரிந்தன.
இன்றைய பங்குச் சந்தை இறுதி நிலவரம் 9741.06 (-188.29), நிப்டி: 2986 (-53.20)
ஆசியாவின் மற்ற பங்குச் சந்தைகளிலும் தொடர்ந்து சரிவுப் போக்கே காணப்பட்டது. அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸிலும் இதே போக்குதான் நிலவியது.












Click it and Unblock the Notifications