இந்தியாவில் ஊடுறுவ பாக். போட்ட சுரங்கம்!

Subscribe to Oneindia Tamil

ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகில் இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ரகசியமாக நுழையும் வகையில் பூமிக்கடியில் சுரங்கப் பாதை அமைத்து சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக ஊடுருவி வந்துள்ளனர் என்ற உண்மை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவினுள் ஊடுருவி பல்வேறு நாச வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு பயிற்சி முகாம்கள் மூலம் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து இந்தியாவினுள் அனுப்பிக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் சமூக விரோதிகள் தீவிரவாதச் செயல்கள் மட்டும் இல்லாமல் போதைப் பொருள் கடத்தல், கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

பாகிஸ்தான் அரசாங்கமே இந்திய ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுகளைப் போலியாக அச்சடித்து இது போன்ற நபர்கள் மூலம் புழக்கத்தில் விட்டு இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயல்வதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

பாகிஸ்தானுக்குள் போய் தாக்கத்தான் நமது அரசு தயங்குகிறது. ஆனால் எல்லைகளையாவது தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா. ஆனால் நமது கண்காணிப்பு கண்கள் மீது மண்ணைத் தூவி விட்டு பக்காவான ஒரு சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர் பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள்.

சில நாட்களுக்கு முன்னர் கையில் போதைப் பொருட்களுடன் பிடிபட்ட இரண்டு கடத்தல்காரர்களை விசாரித்தபோதுதான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. அவர்கள் கூறிய தகவல்படி இந்த சுரங்கப் பாதையை பல காலமாகவே கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+