சிதம்பரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் !
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார் கோயிலில் அரசு பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
காட்டுமன்னார் கோயில் லால்பேட்டை என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலையில் இந்த பள்ளிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும், முடிந்தால் மாணவர்களைக் காப்பாற்றி கொள்ளுங்கள் என்றும் மிரட்டினான்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் போலீசாரிக்கு தகவல் தந்தார். போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் சோதனை நடத்தினர். ஆனால் குண்டு ஏதும் சிக்கவில்லை.












Click it and Unblock the Notifications