சபரிமலை: தங்க அங்கி நாளை பம்பை வருகை
Subscribe to Oneindia Tamil

சபரிமலையில் வரும் 26ம் தேதி களபாபிஷேகமும், மண்டல பூஜையும் நடைபெறுகிறது. மண்டல பூஜை தினத்தில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் அளித்த தங்க அங்கி கடந்த 22 ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு புறப்பட்டது.
சபரிமலை ரதத்தில் கொண்டு வரப்படும் இந்த அங்கி, நாளை பம்பை வந்தடைகிறது. இங்கு கணபதி கோவிலில் பக்தர்களின் தரிசனத்துக்குப் பின் தலைச்சுமையாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும்.
இதையடுத்து தங்க அங்கியை தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிப்பார். நாளை மறுநாள் மண்டல பூஜை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications