கடுமையாக மிரட்டாத வரை பாக் பணியாது: பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானுக்கு கடும் மிரட்டல் விடுத்தால் ஒழிய அது பணிய வாய்ப்பே இல்லை என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா பல்வேறு வழிகளையும் பயன்படுத்தி கடும் நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். எந்த வாய்ப்பையும் நாம் பயன்படுத்தாமல் விடக் கூடாது.
கடுமையான மிரட்டல் விடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் பணியும். அதுவரை அது அதன் பிடிவாத நிலையிலிருந்து இறங்க வாய்ப்பே இல்லை என்றார் சின்ஹா.












Click it and Unblock the Notifications