தேசிய புலனாய்வு ஏஜென்சி: மாநில உரிமைகளை பறிக்க கூடாது - டி.ராஜா
வேலூர்: தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் உரிமைகளை பறிக்க கூடாது. அதற்கேற்ற வகையில் அதில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா வேலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாற்று அணி உருவாக்கும் முயற்சி தற்போது வெற்றி பெறும் சூழலில் உள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டும். அங்கு மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப இந்திய அரசு உரிய முயற்சிகளை எடுக்கவேண்டும்.
தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடியதாக இருக்க கூடாது. அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இடதுசாரிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மாநில அரசு உளவு துறைகளையும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் சேர்த்து இணைந்து ஈடுபடுத்த வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு வீடு விற்பனை செய்ய கூடாது. முஸ்லிம்களுக்கு வீடு வாடகை அளிக்க கூடாது என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் செயலை தடுக்க உரிய சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றார்.