அசோக் சக்ரா விருது-கர்கரே பெயர் பரிந்துரை
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் பெயர் அசோக் சக்ரா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட 14 போலீஸார் உயிரிழந்தனர்.
இவர்களுக்கு அசோக் சக்ரா விருது வழங்க மத்திய அரசுக்கு மகாராஷ்டிர காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ஹசன் கபூர் கூறுகையில், தீவிரவாதத் தாக்குதலின்போது தங்களது இன்னுயிரை நீத்த இவர்களுக்கு அசோக் சக்ரா விருது வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த விருது தவிர குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்திற்கும் கர்கரே உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications