முகர்ஜியுடன் ரைஸ், சீன அமைச்சர் பேச்சு
டெல்லி: பாகிஸ்தானுடனான உறவு வெகு வேகமாக சீர்குலைந்து இரு தரப்பு போர் முஸ்தீபுகளில் இறங்கியுள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைஸ், சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜீய்சி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் முழுமையான அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரணாப் அவர்களிடம் விளக்கினார்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவும் சீனாவும் பாகி்ஸ்தானுக்கு நெருக்குதல் தர வேண்டியது அவசியம் என்றும் பிரணாப் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து பாகி்ஸ்தானிடம் இது குறித்து பேசி வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், ராணுவரீதியிலான நடவடிக்கைகள் எதிலும் இறங்க வேண்டாம் என்றும் பிரணாபிடம் ரைஸ் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமான நாடான சீன இந்த விவகாரத்தில் மேலும் அழுத்தமாக செயல்பட முடியும் என்றும் பிரணாப் அந் நாட்டு அமைச்சரிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications