திருமங்கலம் வேட்பு மனு வாபஸ் முடிந்தது: களத்தில் 26 வேட்பாளர்கள்
மதுரை: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் களத்தில் 26 வேட்பாளர்கள் உள்ளனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றுடன் கெடு முடிந்தது.
திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு ஜனவரி 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனப்பாண்டியன் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர 33 சுயேச்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களில் 5 பேரின் மனுக்கள், மனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர் ஐந்து வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இன்றுடன் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். கெடு நேர முடிவுக்குப் பின்னர் மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மனு வாபஸ் பெற கடைசி நாள் இன்றுடன் முடிந்து விட்டதால் இனி திருமங்கலத்தில் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications