போதையில் ரகளை செய்த போலீஸ்காரர்
மார்த்தாண்டம்: கிறிஸ்துமஸ் பண்டிகை ஓட்டி நேற்று மார்த்தாண்டத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் சர்ச் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் திருவனந்தபுரம், களியாக்கவிளை செல்ல வேண்டிய பயணிகள் ஏராளமானோர் நின்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது போதையில் ஒரு வாலிபர் பைக்கில் வந்து பஸ் நிறுத்ததில் உள்ள இரும்பு கேட் மீது மோதினார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற குழித்துறை போலீஸ் ஏட்டு ஒருவர் ஓடிவந்து பைக்கில் இருந்த வாலிபரை பிடித்தார்.
போதையில் இருந்த அந்த வாலிபர் ஏட்டிடம் தகராறு செய்து அவரை தாக்க முயன்றார். ஏட்டு சட்டையில் இருந்த அரசு முத்திரகைகளைப் பறித்தார்.
இதையடுத்து அந்த வாலிபரை ஏட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கும் அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறு செய்தார்.
விசாரணையில் அவரது பெயர் லிவின் கோவாஷ், ஐரேணிபுரத்தை சேர்ந்தவர் என்றும் சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பிவிட்டனர்.












Click it and Unblock the Notifications