ஆப்கானிஸ்தான் கடத்தல்- 'தமிழர் சைமன் மீட்கப்படுவார்'

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சைமன் பரமானந்தன் (38). இவர் ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இத்தாலி வீரர்களுக்கான உணவுப்பொருள் வினியோக அங்காடியில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பக்ராம் விமான தளத்தில் உள்ள சர்வதேச பாதுகாப்பு உதவிப்படை முகாமில் சைமன் பணியில் இருந்தபோது அவரையும் அவரது மொழிப்பெயர்ப்பாளர், டிரைவர் ஆகியோரையும் தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அங்கிருந்த சைமனின் சகோதரர் சுப்பிரமணியன் தகவல் அறிந்து உடனடியாக காபூலில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார்.
இந்நிலையில் தீவிரவாதிகள் சுப்பிரமணியனைத் தொடர்பு கொண்டு, சைமனை விடுவிக்க 25 லட்ச ரூபாய் தராவிட்டால் அவரைக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
தீவிரவாதிகள் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் அவர்கள் கெடுவை மேலும் நீட்டிக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே தற்போது சைமன் மீட்பு நடவடிக்கை குறித்து சுப்ரமணியன் கூறுகையில், தீவிரவாதிகளிடம் இருந்து சைமனை 2 நாட்களில் மீட்பதற்கான தீவிர ஏற்பாடுகளை செய்து வருவதாக இந்தியத் தூதரகம் உறுதி அளித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications