லாகூர் குண்டுவெடிப்பு: தலிபான் கிளை பொறுப்பேற்றது-பாக். பொய் அம்பலம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: லாகூரில் நடந்த கார் குண்டுவெடிப்புக்கு தாங்கள்தான் காரணம் என தலிபான் ஆதரவு அமைப்பான அன்சர் வா முஹாஜிர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் மூலம், இந்தியர் ஒருவர்தான் இதற்குக் காரணம் என்று கூறி அவரைக் கைது செய்து பாகிஸ்தான் நடத்திய நாடகம் அம்பலமாகிவிட்டது.

லாகூரில் அரசு அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் வசிக்கும் குடியிருப்பில் கார் குண்டுவெடித்தது. இதில் ஒரு பெண் பலியானார். சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த அதே நாளில், கொல்கத்தாவைச் சேர்ந்த சதீஷ் ஆனந்த் சுக்லா என்பவரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்தான் இதற்குக் காரணம் என்றும், அவர் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார் எனவும் வேகமாக கதை அளந்திருந்தது பாகிஸ்தான்.

ஆனால் அது அத்தனையும் பொய் என்று தற்போது தெரிய வந்துள்ளது. தலிபான் ஆதரவு அமைப்பான அன்சர் வா முஹாஜிர் என்ற அமைப்பு, லாகூர் சம்பவத்திற்கு நாங்களே காரணம். இதுபோல மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் கமாண்டர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் டூபான் வசீர், பாகிஸ்தானின் தி நியூஸ் நாளிதழுக்கு போன் செய்து பேசினார். வடக்கு வசிரிஸ்தானிலிருந்து அவர் பேசியதாக தெரிகிறது.

அப்போது அந்த நபர் கூறுகையில், சமீபத்தில் வடக்கு வசிரிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதலுக்கு பழி வாங்கவே இதைச் செய்தோம்.

இதேபோல மேலும் பல தாக்குதல்களை எதிர்பாருங்கள். அரசு நிலைகள் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று அந்தத் தீவிரவாதி கூறியுள்ளான்.

இதன் மூலம், சுக்லா என்ற இந்தியர்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று பாகிஸ்தான் கூறியது அப்படடமான பொய் என்பது 24 மணி நேரத்திலேயே அம்பலமாகி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+