தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல போலீஸ் தடை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை அருகில் உள்ள கல்கேரி கிராமத்தில் தலித் மக்கள் கோவிலுக்கு சென்றபோது காவல்துறையால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை அருகில் உள்ளது கல்கேரி என்ற கிராமம். இங்கு கரகம்மன் மற்றும் ஆஞ்சனேயர் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களை தலித் மக்கள் உட்பட அனைத்து கிராம மக்களும் பொருளுதவி செய்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று வழிபட சிலர் தடை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தலித் மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு கோவில் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து தாசில்தாரிடம் தலித் மக்கள் சார்பில் முறையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்திய அரசு உயர் அதிகாரிகள் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு எழுத்து மூலமாகவும் உடன்பாடு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று 500க்கும் மேற்பட்ட தலித் மக்கள் கோவிலுக்கு சென்றபோது அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு அந்த பகுதியில் உள்ள தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கோவிலுக்குள் நுழைய திடீர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தலித் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுகிறது.
இதனால் இந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications