For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கல்: சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே இயக்குகிறது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 4 மற்றும் 11 தேதிகளில் மாலை 4.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்டிரல் நிலையம் வந்தடையும்.

அதேபோல ஜனவரி 5 மற்றும் 12 தேதிகளில், சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில் நாகர்கோவில் புறப்படும்.

இந்த ரயில்கள் வள்ளியூர், நெல்லை, மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

எழும்பூர் வரை இன்னொரு சிறப்பு ரயில்:

அதே போல நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 5, 12, 19 மற்றும் 26 தேதிகளில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து, ஜனவரி 6, 13, 20 மற்றும் 27 தேதிகளில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், நாகர்கோவிலை மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில்கள், வள்ளியூர், நெல்லை, மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய இடங்களில் நி்ன்று செல்லும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X