'ஸ்பெக்ட்ரம்' ஏலத்தொகை 100 சதவீதம் அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

Ear Phone
டெல்லி: 3 ஜி அலைவரிசைக்கான ஏலத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

செல்போன் சேவைக்கான இரண்டாம் தலைமுறை (2ஜி) ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் 3ஜி அலைவரிசைக்கான ஏல முறையில் சில திருத்தங்களை மத்திய தொலை தொடர்பு துறை செய்தது.

அதன்படி குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.2,020 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்ததை 100 சதவீதம் உயர்த்தி ரூ. 4,040 கோடியாக நிர்ணயித்துள்ளது.

அதுபோல கம்பியில்லா பிராட்பேண்டு எனப்படும் 'வைமேக்ஸ்'ன் குறைந்தபட்ச ஏலத் தொகையையும் ரூ. 1,000 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக அதிகரிக்குமாறு மத்திய தொலை தொடர்புத் துறையை நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த இரு திருத்தங்களால் 3ஜி அலைவரிசை ஏலத்தின் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+