தொழில்துறை வளர்ச்சிக்கு மேலும் சலுகைகள்!
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை சகஜ நிலையில் வைத்திருக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் இரண்டாவது கட்டமாக மேலும் நிதிச் சலுகைகள் மற்றும் வட்டிக் குறைப்புகளை அறிவிக்க உள்ளது மத்திய அரசு.
ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகள் மூலமாக ரூ.3 லட்சம் கோடி வரை நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. இது தவிர 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வீட்டு வசதி வங்கிகளுக்கு கடன் உதவி அளித்தது.
இப்போது மேலும் பல ஆயிரம் கோடிகளுக்கு இரண்டாம் கட்ட சலுகைகளை அறிவிக்கிறது மத்திய அரசு.
இந்த சலுகைகள் தொழில் துறையின் தேக்க நிலையைச் சரிப்படுத்தவும், வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதியின் அளவை அதிகரிக்கும் வகையிலும் இந்த சலுகைகள் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று மாலை சலுகை விவரங்கள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications