இறங்குமுகத்தில் முடிந்த சென்செக்ஸ்
மும்பை: இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் இன்று ஏறுமுகமாகத் துவங்கி இறங்குமுகத்தில் முடிந்தது.
வர்த்தகம் துவஙஅகிய போது 70 புள்ளிகள் கூடுதலாக இருந்தது. விரைவிலேயே இன்றைய நாளில் அதிகபட்சமான 10070 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது.
வர்த்தக நேர முடிவில் 9864 புள்ளிகளில் நிலைப் பெற்றது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 3047-ல் நிலைப் பெற்றது.
ஹிண்டால்கோ பங்குகள் 3.2 சதவிகிதம் உயர்வு கண்டன. டிஎல்எப் பங்குகள் 3 சதவிகிதம் உயர்ந்தன. எச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ் ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளும் லாபத்தில் கைமாறின.
இன்று சத்யம் நிறுவனப் பங்குகள் 2.6 சதவிகிதம் குறைந்த விலையில் கைமாறின. விப்ரோவும் 2சதவிகித நஷ்டத்தில் கைமாறின.
பார்தி ஏர்டெல், டாடா பவர், இன்போஸிஸ், கிராஸிம், மாருதி சுசுகி பங்குகளும் நஷ்டத்தில் கைமாறின.












Click it and Unblock the Notifications