பாக்.கில் 30 தீவிரவாத குழுக்கள்: அந்தோணி
டெல்லி: பாகிஸ்தானில் இன்னும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானின் நிலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. அது அப்படியேதான் இருக்கிறது.
வெறும் அறிக்கை விடுவதும், உறுதிமொழிகள் அளிப்பதும் முக்கியமல்ல. செயல்தான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால், பாகிஸ்தானிடம் எந்த மாற்றமும் இல்லை.
நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும்.
பாகிஸ்தானில் இன்னும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் உள்ளன. அனைத்துமே சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன.
அப்படி இருக்கையில் பாகிஸ்தானை எப்படி நம்புவது. செயல்படுவதற்கு பாகிஸ்தானுக்கு காலக் கெடு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் செயல்பட்டாக வேண்டும்.
நாங்கள் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கவில்லை. இந்தியத் தரப்பிலிருந்து எந்த படைக் குவிப்பும் இல்லை. எல்லாமே வழக்கம் போலவே நடந்து கொண்டிருக்கின்றன. நாம் தயார் நிலையில் இருக்கக் கூடாது என நமக்கு யாரும் கூறத் தேவையில்லை. கூறவும் முடியாது.
பாதுகாப்புப் படையினர் அவர்களது கடமையை செய்து வருகின்றனர். எந்தவித மிரட்டல் போக்கையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.
எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அது நமது கடமை. அதைத்தான் பாதுகாப்புப் படையினர் செய்து வருகின்றனர். நாட்டுக்கு எந்த திசையிலிருந்து ஆபத்து வந்தாலும் சமாளிக்க அவர்கள் ஆயத்த நிலையி்ல இருக்க வேண்டும். அப்படித்தான் அவர்களும் உள்ளனர் என்றார் அந்தோணி.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications