பாக்.கில் 30 தீவிரவாத குழுக்கள்: அந்தோணி
டெல்லி: பாகிஸ்தானில் இன்னும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானின் நிலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. அது அப்படியேதான் இருக்கிறது.
வெறும் அறிக்கை விடுவதும், உறுதிமொழிகள் அளிப்பதும் முக்கியமல்ல. செயல்தான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால், பாகிஸ்தானிடம் எந்த மாற்றமும் இல்லை.
நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும்.
பாகிஸ்தானில் இன்னும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் உள்ளன. அனைத்துமே சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன.
அப்படி இருக்கையில் பாகிஸ்தானை எப்படி நம்புவது. செயல்படுவதற்கு பாகிஸ்தானுக்கு காலக் கெடு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் செயல்பட்டாக வேண்டும்.
நாங்கள் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கவில்லை. இந்தியத் தரப்பிலிருந்து எந்த படைக் குவிப்பும் இல்லை. எல்லாமே வழக்கம் போலவே நடந்து கொண்டிருக்கின்றன. நாம் தயார் நிலையில் இருக்கக் கூடாது என நமக்கு யாரும் கூறத் தேவையில்லை. கூறவும் முடியாது.
பாதுகாப்புப் படையினர் அவர்களது கடமையை செய்து வருகின்றனர். எந்தவித மிரட்டல் போக்கையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.
எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அது நமது கடமை. அதைத்தான் பாதுகாப்புப் படையினர் செய்து வருகின்றனர். நாட்டுக்கு எந்த திசையிலிருந்து ஆபத்து வந்தாலும் சமாளிக்க அவர்கள் ஆயத்த நிலையி்ல இருக்க வேண்டும். அப்படித்தான் அவர்களும் உள்ளனர் என்றார் அந்தோணி.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications